×

மாவட்ட ஆட்சியர் அலுவலக தகவல் அறியும் உரிமை சட்ட வலைதள பிரிவை செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

 

கூடலூர்,நவ.27: ஓவேலி மக்கள் இயக்கம் சார்பில் கலெக்டருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த மே மாதம் 25ம் தேதி சில தகவல்களை வழங்க கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நீலகிரி கலெக்டர் அலுவலக இணையதள வலைதள தகவல் அறியும் உரிமை சட்ட பிரிவில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 6 மாதங்கள் கடந்த பிறகும் அலுவலகத்தில் உள்ள பொதுத் தகவல் அலுவலர் வலைதளம் வாயிலாக விண்ணப்பித்த கடிதத்தை எடுத்து பார்க்கவில்லை.

மாதங்கள் பல கடந்த பிறகும் கோரிய தகவல்கள் கிடைக்காத நிலை உள்ளது. செலவு,அலைச்சல் இன்றி தகவல் அறியும் உரிமை சட்ட கடிதங்களை தமிழக அரசு துறைகளுக்கு அனுப்பி வெளிப்படையான ஒரு நிர்வாகத்தை கட்டமைக்கவே தகவல் அறியும் உரிமை சட்ட வலைதள பிரிவை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. எனவே தகவல் அறியும் உரிமை சட்ட வலைதள பிரிவை மீண்டும் செயல்வடிவத்திற்கு கொண்டு வர கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post மாவட்ட ஆட்சியர் அலுவலக தகவல் அறியும் உரிமை சட்ட வலைதள பிரிவை செயல்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : District Collector's Office ,Kudalur ,Oveli People's Movement ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...